இந்தியாவில் புதிதாக 444 பேருக்கு கொரோனா.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 113 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் 500-ஐ தாண்டியது. அதாவது ஒரே நாளில் 524 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 444 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது என கூறப்பட்டுள்ளது.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 90 ஆயிரத்து 936 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 252 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 56 ஆயிரத்து 345 ஆக உயர்ந்துள்ளது. தொற்று மீட்பு சிகிச்சையில் 3,809 பேர் உள்ளனர். இது நேற்றைவிட 191 அதிகமாகும். தொற்று பாதிப்பால் நேற்று தமிழ்நாட்டில் ஒருவர் இறந்துள்ளார். மொத்த பலி எண்ணிக்கை 5,30,782 ஆக உயர்ந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.