திருக்கோவில் உமிரியில் இல்மனைட் அகழ்வுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

அம்பாரை மாவட்டம் திருக்கோவில் பிரதேச எல்லைக்குட்ட்பட்ட தாண்டியடி உமிரி பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வு மேற்கொள்ள மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை கைவிடக்கோரியும் இல்மனைட் அகழ்வை தடை செய்யகோரியும் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று நடைபெற்றது.

இவ் ஆர்ப்பாட பேரணியானது தாண்டியடியில் ஆரம்பமாகி திருக்கோவில் பிரதேச செயலகம் வரை சென்று நிறைவு பெற்றது இவ் .இறுதில் ஆர்ப்பாட்டகாரர்களால் மகஜர்கள் திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு த.கஜேந்திரன்,பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.

இவ் பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன்,திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் கமலராஜன்,காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில்,பொத்துவில் பிரதேச சபை உபதவிசாளர் பார்த்தீபன் ஆகியோரும் பெருமளவான மக்களும் இவ் எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.

-நிரோஜன் சதா-

Leave A Reply

Your email address will not be published.