மக்களின் வாக்குகளை பெற்றவர்களை தூங்கவிட கூடாது.

அபிவிருத்தி என்று கோசமிட்டு மக்களின் வாக்குகளை பெற்றவர்களை தூங்கவிட கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு- போரதீவுப்பற்றில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மக்கள் சந்திப்பில் இரா.சாணக்கியன் மேலும் கூறியுள்ளதாவது,  “தற்போதுள்ள அரசாங்கமானது பாரிய அசூர பலத்துடன் உள்ளது. அவர்கள் நினைத்ததை செய்வதற்காகவும்தான் 20வது அரசியற் சீர்திருத்த சட்ட மூலமொன்றை உருவாக்கியுள்ளனர்.

ஆகவே, இனி நாம் அபிவிருத்தி என்று கோசமிட்டு மக்களின் வாக்குகளை பெற்றவர்களை தூங்கவிட கூடாது. அவர்களிடம் சென்று எமக்கு தேவையானதை கூறி அவற்றை பெற்று வரும்படி அழுத்தம் கொடுக்க வேண்டும்.

என்னால் முடிந்த செயற்படுகளை எனது காலத்தினுள்  நிச்சயம் செய்து தருவேன்” என அவர்  மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.