குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை மீட்பு.

பதுளை தெமோதரை சௌதம் தோட்டம் மேற்பிரிவில் அமைந்துள்ள குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெமோதரை சௌதம் தோட்டம் மேற்பிரிவில் (5 ஆம் கட்டையில்) அமைந்துள்ள குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை குளத்தில் மிதப்பதை கண்டு பிரதேச மக்களால் எல்ல பொலிசாருக்கு தெரியபடுத்தியதையடுத்து சடலம் எல்ல பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது .

குறித்த சடலம் சௌதம் மேற்பிரிவை சேர்ந்த 74 வயதையுடைய பெரியம்மன்பெரியான் என எல்ல பொலிசார் தெரிவிப்பதுடன் பிரேத பரிசோதணைக்காக சடலம் பதுளை மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.