மிருசுவில் பகுதியில் சென்ற வான் மரத்துடன் மோதிய நிலையில் சாரதி பலி.

யாழ்ப்பாணம் கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் சென்ற வான் மரத்துடன் மோதியநிலையில் வான் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் பரந்தனை சேர்ந்த 27 வயதான குமாரசாமி கஜீபன் என தெரியவருகிறது.

இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை(27) அதிகாலை 3.30 மணியளவில் கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.