டிப்பர் மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் ஒருவர் பலி.

யாழ்.சாவகச்சேரி- தனங்களப்பு- அறுகுவெளி- ஐயனார்கோவிலடியில் இடம்பெற்ற டிப்பர்- மோட்டார் சைக்கிள் விபத்தில் முன்னாள் போராளியான குடும்பப் பெண் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் A32 பிரதான வீதியில் இன்று நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய துசாந்தி என்ற பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

முன்னாள் போராளியான குறித்த குடும்பப் பெண் ஒரு காலை இழந்தநிலையில் செயற்கைக் கால் பொருத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.