யாழில் கிணற்றில் வீழ்ந்து மூதாட்டி பரிதாபச் சாவு!

கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்., மாவிட்டபுரம் வடக்கு அமெரிக்கன் மிஷன் வீதியைச் சேர்ந்த முருகேசு நல்லம்மா (வயது – 74) என்ற மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.

மூதாட்டி கிணற்றுக்குள் வீழ்ந்த சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்ட வலிகாமம் கிழக்கு திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.