அரசுக்கு எதிராக ஒன்றிணைவோம்! – சஜித் அறைகூவல்.

அரசின் சதி நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கடுவெல பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைப் பிரயோகித்து மக்களின் மனித உரிமைகளை மீறி மக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க அரசு முயற்சிக்கின்றது.

அதேவேளை, தொழிற்சங்கத்தினரையும், மாணவர் போராட்டக்காரர்களையும் பயங்கரவாதிகளாக அரசு அடையாளப்படுத்துகின்றது.

கோட்டாபய ராஜபக்சவை விரட்ட வீதிக்கு இறங்கிய இலட்சக்கணக்கான மக்களையும் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தி இதனூடாக மாதக்கணக்காகச் சிறையில் அடைக்க அரசு முற்படுகின்றது.

ஏலத்துக்கு விலைபோகும் உறுப்பினர்கள் எம்மிடம் இல்லை. எதிர்க்கட்சியிலிருந்து அரசுக்குச் செல்வதற்குப் பதிலாக அரசிலிருந்து எதிர்க்கட்சிக்கு வருவதற்கே பலர் காத்திருக்கின்றனர்.

கட்சி தாவல் செய்தி கேட்டு முன்னைய எதிர்க்கட்சித் தலைவர்கள் தமது உறுப்பினர்களைப் பாதுகாத்துக்கொள்ள சிங்கபூருக்கு அனுப்பியது போன்று எமக்கு அத்தகைய தேவைப்பாடு இல்லை.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.