மனோவைப் பாராட்டும் செல்வம்!

“தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அரங்கம் என்ற உங்களது இந்த அபார முயற்சியைப் பாராட்டி வரவேற்பதுடன், எதிர்வரும் காலங்களில் உங்களுக்கு உறுதுணையாக உங்களுடன் சேர்ந்து பயணிப்பதற்கு நாங்களும் தயாராக உள்ளோம் என்பதையும் தெரிவித்து நிற்கின்றோம்.”

இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பியிடம் தெரிவித்துள்ளார் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அரங்கம் ஒன்றை நாடாளுமன்றத்தில் அமைத்திடும் யோசனையை முன்னிறுத்தி மனோ கணேசன் எம்.பி., தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கு மின்னஞ்சல் கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் போதே ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.