மீண்டும் அதிகரிக்கும் கொரோனா…முகக்கவசம் அணிவது கட்டாயம்…தமிழக அரசின் புது உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் கூட்டமான இடங்களில் மாஸ்க் அணியுங்கள் என மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் சில மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தியேட்டர் வணிகவளாகம் உள்ளிட்ட கூட்டமான இடங்களில் மக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.