அடுத்த வருடத்தின் நடுப்பகுதி வரை தேர்தல் இல்லை

அடுத்த வருடத்தின் நடுப்பகுதி வரை தேர்தல் நடத்தப்படாது என அரசின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அடுத்த வருட நடுப்பகுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான பொதுக் கூட்டணியில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக ரணில் விக்ரமசிங்க , அக்கட்சியின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உட்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் முன்னோடி நடவடிக்கையாக இந்த ஆண்டு மே தினத்தை கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க பொது வேட்பாளராக களமிறங்கத் தயாராக இருப்பதால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த மே தின கொண்டாட்டத்தில் , நேரடியாக ஈடுபடமாட்டார் என்றும் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.