மசாஜ் நிலையம் சென்றவர் உயிரிழப்பு.

கந்தானை பகுதியில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சுமார் 42 வயதுடைய திருமணமானவர் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

கந்தானை நாகொட பிரதேசத்தை சேர்ந்த இந்த நபர் நேற்று நள்ளிரவு மசாஜ் நிலையத்திற்கு வந்துள்ளார்.

பின்னர் இன்று காலை அந்த நபர் அங்கு உயிரிழந்தார்.

மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என கந்தானை பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.