புத்தாண்டு பிறந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 185 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் ….

புத்தாண்டு பிறப்புடன் நேற்று (14) முதல் இன்று (15) காலை வரை 185 பேர் விபத்துக்களில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விபத்து பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (14ம் தேதி) முதல் இன்று (15ம் தேதி) காலை 7 மணி வரையிலான 24 மணி நேரத்தில் சாலை விபத்துகளில் 55 பேரும், சண்டைகளால் 44 பேரும், தவறி விழுந்து 36 பேரும், வீடுகளில் விபத்து மற்றும் 7 பேரும் பட்டாசு விபத்தில் ஒருவரும் காயமடைந்துள்ளதாக அந்த பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், முன்னைய ஆண்டுகளை விட பட்டாசு விபத்துகளால் பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக அந்த பிரிவின் மூத்த மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு பட்டாசு விலை உயர்வால் மக்கள் பட்டாசு பயன்பாட்டிலிருந்து விலகி இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.