யாழில் பெண் இராணுவ வீரர் ஒருவர் டெங்கு நோயினால் மரணம்!

யாழ்ப்பாணம் குருநகர் இராணுவ முகாமில் கடமையாற்றிய பெண் இராணுவ வீரர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் நேற்று முன்தினம் (16) உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் வசிக்கும் கே.எம்.கே. செவ்வந்தி என்ற இவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் பலாலி இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

பிரேத பரிசோதனையை மேற்கொண்ட யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் டெங்கு காய்ச்சலினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். யாழ்ப்பாணம் பொலிஸார் சாட்சியங்களை முன்னெடுத்தனர் .

Leave A Reply

Your email address will not be published.