கொடிகாமம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி ஸ்தலத்திலேயே மரணம்!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி நேற்று இரவு 10 மணியளவில் தல்லடி பகுதியில் வாகன விபத்தில் சிக்கி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம். குணவர்தனவே உயிரிழந்துள்ளார்.

சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது பின்னால் வந்த CTB பஸ் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதிய வேளை , மோட்டார் சைக்கிளுடன் வீதியில் தூக்கி எறியப்பட்ட அவர் மீது முன்னால் வந்து கொண்டிருந்த லொறி அவர் மேல் ஏறிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த இபோச பஸ்ஸின் மூலமே முதல் விபத்து ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.