வடக்கு பிறீமியர் கிளிநொச்சி அணியினர் வெற்றி வாகை.

வடக்குமகாண பிரீமியர் லீக் வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்று வருகிறது.  குறித்த சுற்றுத் தொடரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற போட்டியில் கிளிநொச்சி அணியினரும் வவுனியா அணியினரும் பலப்பரீட்சை செய்தனர்.

முதலில் துடுப்பெடுத்தாடிய வவுனியா அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப் பரிமாற்றங்களில் நான்கு இலக்குகளை இழந்து 185 ஓட்டங்களை பெற்றிருந்தனர். துடுப்பாட்டத்தில் வவுனியா அணி சார்பாக பிரக்தன் 36 ஓட்டங்களையும் மதுசன் மற்றும் தசறீதன் ஆகியோர் தலா 34 ஓட்டங்களையும் பெற்றனர்.பந்து வீச்சில் கிளிநொச்சி அணி சார்பாக அஜித் மருதன் லகிதரன் ஆகியோர் தலா ஒவ்வொரு இலக்கினை வீழ்த்தினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி அணியினர் இறுதிப் பந்து வரை விறுவிறுப்பாக போட்டியை கொண்டு சென்று 2 இலக்குகளினால் வெற்றி பெற்றது

கிளிநொச்சி அணி சார்பாக அனுக்சன் 49 ஓட்டங்களையும் அஜித் 7 பந்துகளில் 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக அனுக்சன் தெரிவானார்

Leave A Reply

Your email address will not be published.