அக்குறணையில் வெடிகுண்டு பீதியை ஏற்படுத்திய வாலிபர் கைது.

அக்குறணை இஸ்லாமிய மசூதிகள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப் போவதாக போலி அழைப்பு விடுத்த நபரை, குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று (22) காலை மேற்கொண்ட நடவடிக்கையின் போது கைது செய்துள்ளனர்.

21 வயதான இசதீன் மொஹமட் எனும் சந்தேக நபர் , கண்டி , ஹாரிஸ்பத்துவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.