மலேசியாவில் இருந்து சென்னை விமானநிலையத்திற்கு 22 பாம்புகளுடன் வந்த பெண்; சுங்கத் துறையினரால் கைது!

மலேசியாவில் இருந்து வெள்ளிக்கிழமை சென்னை வந்த பெண் பயணி ஒருவரிடம் இருந்து வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த 22 பாம்புகள் மீட்கப்பட்டுள்ளன.

விமானநிலையத்தில் நடத்தப்பட்ட சோதனை
பாம்புகளைக் கொண்டு வந்த பெண் பிளாஸ்டிக் போத்தல்களில் தனித்தனியே பாம்புகளை கொண்டு வந்துள்ளார்.

சோதனை நடத்திய அதிகாரிகள் நீண்ட கம்பிகளால் பாம்புகளை வெளியே எடுக்கும் பொழுது சில பாம்புகள் வெளியே வந்துள்ளது. இது தொடர்பான காணொளியும் வெளியாகி வந்துள்ளது.

இந்நிலையில் சில பாம்புகள் கட்டுப்பாடின்றி வெளியே வந்துள்ளது.

கோலாலம்பூரில் இருந்து வந்த பெண் சுங்கத் துறையினரால் கைது செய்யப்பட்டதாகவும் மேலும் பச்சோந்திகளையும் கண்டுப்பிடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.