திருமலையில் 17 வயது சிறுவன் சடலமாக மீட்பு!

திருகோணமலையில் 17 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஸ்தோட்டம் பகுதியில் குறித்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார் என்று உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வசந்தராஜா நிலுஜன் எனும் சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த திருகோணமலை நீதிமன்ற நீதிவான் விசாரணைகளை மேற்கொண்டார். சடலம் மீதான உடற்கூற்றுப் பரிசோதனைக்கும் உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.