கதவு திறந்தே உள்ளது; தாராளமாகப் போகலாம்! – கட்சிக் கூட்டத்தில் சஜித் ஆவேசம்.

“அரசுப் பக்கம் போக விரும்பினால் தாராளமாகப் போகலாம். கதவு திறந்தே உள்ளது” – என்று தனது கட்சியின் எம்.பிக்களுடான சந்திப்பில் சஜித் பிரேமதாஸ ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் நிலவரங்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் கடந்த வாரம் கொழும்பில் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் கூடியது.

அதில் ஐக்கிய மக்கள் சக்தி எம்பிக்கள் அரசு பக்கம் பாய்வது பற்றியும் பேசப்பட்டது. அது தொடர்பில் சஜித் ஆவேசத்துடன் தனது நிலைப்பாட்டை வெளியிட்டார்.

“எனது கட்சி எம்.பிக்கள் அரசு பக்கம் போகமாட்டார்கள் என்று நான் நம்புகின்றேன். அதையும் தாண்டி யாரும் போக விரும்பினால் நான் அவர்களைப் பிடித்துக்கொண்டு இருக்கமாட்டேன். தாராளமாகப் போகலாம். கதவு திறந்தே உள்ளது” – என்று சஜித் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.