சதித் திட்டத்தால் பிரதமர் பதவியை பெறுவதற்கு மஹிந்த தயாரில்லை! – நாமல் எம்.பி. தெரிவிப்பு.

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சதித் திட்டங்களூடாகப் பிரதமர் பதவியைப் பெறுவதற்குத் தயாராகவில்லை. மக்கள் ஆணையின்படி, அவர் மீண்டும் பிரதமர் பதவியைப் பெறுவதற்குத் தயாராகவுள்ளார்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

ஊடகங்களிடம் இன்று கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மஹிந்த ராஜபக்ச மக்களுக்காகவே பிரதமர் பதவியை விட்டு வெளியேறினார். அவர் மீண்டும் இந்த நாட்டின் தலைமைக்கு திரும்பினால், அது மக்களின் விருப்பத்துடனேயே அமையும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.