சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பௌத்த பிக்கு கைது

மொரட்டுவ எகொட உயன பிரதேச பௌத்த விகாரையில் உள்ள 62 வயதான பௌத்த பிக்கு , சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பௌத்த பிக்கு , சிறுமியின் தாயாருடன் கள்ள தொடர்பில் இருப்பதாகவும் , பிக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமியின் தாய்க்கு மது அருந்த விட்டு ,அவர் போதையாகிய பின் பலமுறை சிறுமியை அவர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த பிக்கு இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளின் பௌத்த விவகார ஆலோசகராக பதவி வகித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சந்தேகத்தின் பேரில் சிறுமியின் தாயும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.