தான் மேற்கொண்ட இனவழிப்பை யுத்த வெற்றியாகக் கொண்டாடும் இலங்கை அரசு.

மட்டக்களப்பில் இன்றைய தினம் சிவில் சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழின அழிப்பின் வலியை உணரும் நாள் எனும் கருப்பொருளிலான முள்ளிவாய்க்கால் அவலத்தின் வலியை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்விலேயே இவ்வாறு கருத்து தெரிவிக்கப்பட்டது.

ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்ட அடுத்த தினத்தை யுத்த வெற்றி நாளாக இலங்கை அரசாங்கத்தினால் கொண்டாடப்படுகின்ற நிலையில் அன்றைய தினத்தை முள்ளிவாய்க்கல் பேரழிவின் வலியை உணரும் நாளாக அனுஸ்டிக்கும் முகமாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.