வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவன் கார் மோதி சாவு!

வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவனைக் கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே குறித்த சிறுவன் சாவடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இரத்தினபுரி, பலாங்கொடை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

14 வயது சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சிறுவனின் சடலம் பலாங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

காரின் சாரதியைக் கைது செய்த பலாங்கொடை பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.