நேற்றைய மழையால் நிறுத்தப்பட்ட IPL இறுதிப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு….

நேற்று மழையால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேற்று மைதானத்திற்கு வந்தனர்.

கடும் மழை காரணமாக, போட்டியின் ஒரு பந்தையும் வீச முடியாத அளவுக்கு நிலமை மோசமானது. அதன்படி நேற்றைய போட்டியை கைவிட நடுவர்கள் முடிவு செய்தனர்.

ஏதேனும் காரணத்தால் இறுதிப் போட்டி தடைபட்டால் போட்டித் திட்டத்தில் கூடுதல் நாள் ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று வரை போட்டி நீடிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.