பரந்தன் பகுதியில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடிகள். (பிந்திய செய்தி இணைப்பு)

கிளிநொச்சி  பரந்தன், ஓசியர் சந்திப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண், பெண் இருவரின் சடலங்கள் இன்று (10) காலை மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 4ம் திகதி முதல் காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பரந்தனைச் சேர்ந்த யாழ்ப்பாணம் மின்சார சபையில் பணியாற்றும் சுசிதரன் (28-வயது) இரத்தினபுரத்தைச் சேர்ந்த கிளிநொச்சி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் தனுஷியா (27-வயது) ஆகியோரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் காதலித்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் குறித்த யுவதிக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பிரதேச செயலகத்தில் வேலை கிடைத்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்தி:

கிளிநொச்சியில் காதலர்
சடலங்களாக இன்று மீட்பு

– பொலிஸார் தீவிர விசாரணை

கிளிநொச்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண், பெண் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பெரிய பரந்தன் பகுதியிலுள்ள கூட்டுறவு சங்கத்தின் பழைய வளாகத்தில் கயிற்றில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலங்கள் அடையாளம் காணப்பட்டன.

கடந்த 4ஆம் திகதி முதல் காணாமல்போன நிலையில் தேடப்பட்டு வந்த 28 வயதான சுசிதரன் மற்றும் 27 வயதான தனுஷியா ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுசிதரன் என்பவர் இலங்கை மின்சார சபையின் யாழ்ப்பாணம் கிளையில் பணியாற்றி வந்துள்ளார். தனுஷியா என்பவர் கிளிநொச்சி பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே பட்டதாரி நியமனதுக்கமைய பிரதேச செயலகத்தில் வேலை கிடைத்துள்ளது.

இருவரும் காதலர்கள் என்று அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.