அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் காளான் செய்கை விழிப்புணர்வு

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பசுமை தோட்ட செயற்குழு மற்றும் அக்கரைப்பற்று விவசாய விரிவாக்கல் நிலையம் ஆகிய இணைந்து மேற்கொண்ட காளான் செய்கை விழிப்புணர்வு நிகழ்வு வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நேற்று (08) இடம்பெற்றது.

வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஐ.எம்.ஜவா ஹிர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதான வளவாளர்களாக அக்கரைப்பற்று விவசாய விரிவாக்கல் நிலையத்தின் பொறுப்பதிகாரி பி.நாகேந்திரன், தொழிநுட்ப உத்தியோகத்தர் நிப்றாஸ் ஆகியோர் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.

நிகழ்வில் வைத்தியசாலையின் பசுமை தோட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என கலந்து கொண்டு காளான் செய்கை தொடர்பான பயிற்சியை பெற்றுக்கொண்டனர்.

வெளிநாட்டு உணவு இறக்குமதிகளை குறைத்து உள்நாட்டு உணவு உற்பத்தியினை அதிகரிக்கும் நடவடிக்கையினை அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.