காலி கடற்கரையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்பு!

காலி – கோட்டை கடற்கரைப் பகுதியில் பெண் ஒருவரின் சடலத்தைப் பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்டுள்ள பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

35 முதல் 40 வயதுக்கிடைப்பட்ட ஐந்து அடி உயரமான பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சடலம் கராப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.