திருவிழாக்களில் நடைபெறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச நடனம் கூடாது.. டிஜிபி அதிரடி உத்தரவு..!

கோயில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு, தமிழ்நாடு காவல்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.

கோயில் விழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு மனு அளிக்கப்பட்டால் 7 நாட்களுக்குள் விழாக்குழுவுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், கோயில் விழாக்களில் கலாச்சார நிகழ்வுகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்றும், ஆபாச காட்சிகள், ஆபாச நடனம் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், நிகழ்ச்சிகள் எதுவும் இரவு 10 மணிக்கு மேல் நீடிக்கக்கூடாது என்றும், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் பெண் கலைஞர்களுக்கு இழுக்கு ஏற்படும் வகையில், ஆபாச ஆடையில் சித்தரிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்படுள்ளது.

இத்தகைய வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.