ஐஸ் போதைப்பொருள் வர்த்தகம்: இந்தியர் உள்ளிட்ட எண்மர் கைது.

இலங்கைக்கு ஐஸ் போதைப்பொருளைக் கடத்திய இந்தியர் ஒருவர் உள்ளிட்ட எண்மர் கற்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்பிட்டியிலிருந்து அக்கறைப்பற்று பகுதிக்கு ஐஸ் போதைப்பொருளைக் கடத்திய ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்தே ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாகத் தெரிவிக்கப்படும் இந்தியர்கள் உள்ளிட்ட எண்மர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலிருந்து புடவைகளை இலங்கைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் இந்தியரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.