கஜேந்திரகுமார், காவல்துறை மீது முறைப்பாடு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தனது நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பொலிஸார் செயற்பட்டதாக முறைப்பாடு செய்ததன் பிரகாரம், மருதங்கேணி பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலரை யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவின் அலுவலகத்தில் ஜூன் 07 மற்றும் 09 ஆகிய தினங்களில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறாக கடந்த 07ஆம் திகதி மருதங்கேணி பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை மனித உரிமைகள் அலுவலகத்திற்கு வந்து கடந்த 02ஆம் திகதி வடமராட்சி கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பரீட்சை மண்டபத்திற்கு அருகில் ஏற்பட்ட தகராறு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக வந்திருந்தனர்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தடுத்ததாகவும், தாக்க முயற்சித்ததாகவும், திட்டியதாகவும், அச்சுறுத்தியதாகவும் மரதாங்கேணி பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் அலுவலகத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனினும் மனித உரிமை அலுவலகத்திற்கு வந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சில மணிநேர விசாரணையின் பின்னர் திரும்பிச் சென்றதையடுத்து மேலும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் எதிர்வரும் 9 ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் மனித உரிமை அலுவலகத்திற்கு வர உள்ளனர் என யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் டி.கனகராஜ் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.