யாழில் பொலிஸாரின் அச்சுறுத்தலுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியக் கிளையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ். பொலிஸ் நிலையத்துக்குச் சொந்தமான ஜீப்புக்கு முன்பாக நின்று பெண் ஒருவர் ஒளிப்படம் எடுத்துள்ளார். அதனைப் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அந்த ஒளிப்படத்தை மையமாக வைத்து பொலிஸாருக்கு எதிராக விமர்சனத்தை அரசியல் செயற்பாட்டாளரான ஒருவர் தனது பேஸ்புக்கில் முன்வைத்துள்ளார்.

இதையடுத்துச் சட்டத்துக்கு முரணான வகையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து தன்னை பொலிஸ் நிலையத் தலைமைப் பொலிஸ் அதிகாரி அச்சுறுத்தினார் என்று தெரிவித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியக் கிளையில் சம்பந்தப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.