வெள்ளவத்தையில் ரயில் மோதி ஒருவர் பலி!

கொழும்பு, வெள்ளவத்தையில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது என்று வெள்ளவத்தைப் பொலிஸார் இன்று (10) தெரிவித்தனர்.

கோட்டையில் இருந்து தெஹிவளையை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் அடையாளம் காணப்படவில்லை என்றும், சடலம் களுபோவில வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் வெள்ளவத்தைப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.