காட்டில் விறகு வெட்டிக் கொண்டிருந்த தந்தையும் மகனும் யானை தாக்கி மரணம்!

காட்டில் விறகு வெட்டிக் கொண்டிருந்த தந்தையும், மகனும் யானை தாக்கிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் மொனராகலை மாவட்டம், பிபிலை பிரதேசத்தில் நேற்று (09) இடம்பெற்றுள்ளது.

இருவரினதும் சடலங்கள் இன்று (10) காலை மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

49 வயதுடைய தந்தையும், 20 வயதுடைய மகனும் யானையின் தாக்குதலுக்கு இலக்காகிப் பலியாகியுள்ளனர்.

சடலங்களை வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.