ரணில் மீண்டும் வெளிநாடுகளுக்குப் பயணம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 17ஆம் திகதி இலண்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

பரிஸ் கிளப் உறுப்பினர்களை இந்த விஜயத்தின் போது சந்திக்க ஜனாதிபதி ரணில் திட்டமிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கடன் நெருக்கடிக்கான தீர்வு மற்றும் கடன் ஸ்திரத்தன்மைக்கு ஆதரவளிப்பதாகப் பரிஸ் கிளப் முன்னதாக அறிவித்திருந்தது.

இந்தநிலையில், இந்தப் பயணத்தின்போது இலங்கையின் எதிர்கால கடன் மறுசீரமைப்புப் பணிகள் குறித்தும் ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார் என்று அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.