செந்தில் பாலாஜிக்கு இதய ரத்தக் குழாயில் அடைப்பு…!

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை இன்று நள்ளிரவில் கைது செய்தது. கைது நடவடிக்கையின் போது அமைச்சருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த சமயத்தில் அவருக்கு 160/100 என்ற அளவில் ரத்த அழுத்தம் இருந்துள்ளது. இதனையடுத்து, ஐசியுவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.