வடக்கு ஆளுநர் சார்ள்ஸ் இணைத்தலைவராக நியமனம்!

வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வடக்கின் 5 மாவட்டங்களினதும் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளரால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநராகக் கடந்த மாதம் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மீண்டும் நியமிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைமைப் பதவி வழங்கப்படவில்லை. இதனால் வடக்கின் 5 மாவட்டங்களிலும் அண்மையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் அவர் பங்கேற்கவில்லை.

இந்தநிலையில், வடக்கின் 5 மாவட்டங்களினதும் ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக அவரை ஜனாதிபதியின் செயலாளர் நியமித்து மாவட்ட செயலகங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.