உலக தரிசனம் அமைப்பின் பிராந்திய அபிவிருத்தி திட்ட நிறைவு விழா.

உலக தரிசனம் அமைப்பின் பிராந்திய அபிவிருத்தி திட்ட நிறைவு விழா

உலக தரிசனம் அமைப்பின் பிராந்திய அபிவிருத்தி திட்ட நிறைவு விழா 10.09.2020 நாவிதன்வெளி பிரதேச செயலக கலாச்சார மத்திய நிலையத்தில் பிரதி கல்வி பணிப்பாளர் வி. நிதர்சினி தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு அதிதிகளாக உலக தரிசனம் அமைப்பின் தேசிய பணிப்பாளர் தனன் சேனாதிராஜா, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் , நாவிதன்வெளி பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் , கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.சகுணன் ,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள்,அதிபர்கள் , உலக தரிசன அமைப்பின் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது இப்பிரதேசத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றிய அதிகாரிகளுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.