சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை.

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்றும் கனமழை தொடரும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், எழும்பூர், அண்ணாசாலை, திருவல்லிக்கேணி, மெரினா கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னை தரமணி, வேளச்சேரி, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் சென்னை ஈ.சி.ஆர் மற்றும் திருப்போரூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.