ஹெரோயினுடன் வசமாகச் சிக்கிய தனியார் கல்வி நிலைய ஆசிரியர்!

தனியார் கல்வி நிலைய ஆசிரியர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு – பொரளையில் உயர்தரப் பிரிவு மாணவர்களுக்குக் கற்பிக்கும் 31 வயதுடைய ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியர் இன்று காலை காரில் சென்ற போது வெல்லம்பிட்டியவில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதாகும் போது அவரிடமிருந்து 350 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.