கட்சித் தலைவர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் இன்று (27) நடைபெறவிருந்த நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுக் கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (30) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வௌ்ளிக்கிழமை காலை 9.30 மணிக்குச் சபாநாயகரின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. .

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான பிரேரணைகளுக்கு நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெறும் நோக்கில் எதிர்வரும் சனிக்கிழமை நாடாளுமன்ற சபை நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் இதன்போது தீர்மானம் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.