திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து…26 பேர் உடல் கருகி பரிதாப பலி..!

மகாராஷ்டிராவின் புல்தானா பகுதியில் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்தின் டீசல் டேங்க் வெடித்ததில் 3 குழந்தைகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம், எவத்மால் பகுதியில் இருந்து புனே நோக்கி 33 பேருடன் தனியார் பேருந்து சென்றுகொண்டிருந்தது. புல்தானா பகுதியில் உள்ள சம்ருதி மகாமார்க் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 2 மணிக்கு சென்றுகொண்டிருந்தபோது, லேசான மழை பெய்ததால், டயர் வெடித்துள்ளது.

இதனால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்தின் டீசல் டேங்கும் வெடித்து சிதறியது. இதில், 3 குழந்தைகள் உட்பட 26 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த 7 பேர் புல்தானா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டீசல் டேங்க் வெடித்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் மகாராஷ்டிராவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.