காலிமுகத்திடல் சதுக்கத்தில் விற்கப்படும் மோசமான உணவுகள்.

கொழும்பு நகரின் மிகப்பெரிய வெற்று இடமாக விளங்கும் காலி முகத்திடல் சதுக்கம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு அழகிய பகுதியாக திகழ்கிறது.

இதனால், தினமும் ஏராளமானோர் தமது ஓய்வு நேரத்தை கழிக்கவும், நடைபயிற்சி செய்யவும் இந்த இடம் நோக்கி வந்து வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், இங்கு நாள்தோறும் வரும் மக்களுக்கு பொழுது போக்குக்கான இடமாக மாத்திரமல்லாமல், வந்து செல்வோருக்கு உணவு விற்கும் வகையில் கடற்கரைக்கு அருகிலேயே சிறிய கடைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இந்த சிறிய உணவுக்கடை வியாபாரிகள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதாவது மலசலகூடம் போன்ற அசுத்தமான இடங்களில் வைத்து தயாரிக்கப்படும் பொருத்தமற்ற உணவுகள் கொழும்பு காலி முகத்திடலுக்கு கொண்டு வந்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனை இலங்கை துறைமுக முகாமைத்துவ மற்றும் ஆலோசனை சேவைகள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுராஜ் கதுருசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து காலி முகத்திடல் சதுக்கத்தில் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், காலிமுகத்திடலுக்கு வரும் மக்களுக்கு தரமான உணவை வழங்கும் நோக்கில் இந்த வர்த்தகர்களை ஒழுங்குபடுத்த இலங்கை துறைமுக அதிகாரசபை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.