நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் பலர் பாதிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் இன்று காலை வரை 59 குடும்பங்களைச் சேர்ந்த 245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் 42 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.

அத்துடன், 28 குடும்பங்களைச் சேர்ந்த 121 பேர் 2 பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் இன்றும் மழை பெய்து வருகின்றது. மாவட்டத்துக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.