ஹயஸ் மோதி தந்தையும் மகனும் பரிதாப மரணம்!

வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் சாவடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் அநுராதபுரம் மாவட்டம், கெப்பிட்டிக்கொல்லாவை பிரதேசத்தில் இன்று (10) மாலை 6.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

47 வயதுடைய தந்தையும், 17 வயதுடைய மகனுமே இதன்போது உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் சென்ற தந்தையையும் மகனையும் எதிர்த் திசையில் வந்த ஹயஸ் வான் மோதியுள்ளது.

இதன்போது சம்பவ இடத்திலேயே தந்தையும் மகனும் சாவடைந்துள்ளனர்.

ஹயஸ் வானின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.