ரூ.89.19 கோடி சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத்துறை நடவடிக்கை

திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன், அவரது குடும்ப உறுப்பினர்களின் ரூ.89.19 கோடி மதிப்புடைய சொத்துக்கள் அமலாக்கத்துறையால்  முடக்கப்பட்டது.

அரக்கோணத்தின்  திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் ஆவார். அவர் மீது சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்தில் சட்டவிரோதமாக பணத்தை அந்நிய செலவாணிக்கு மாற்றியதாக குற்றம்சாட்டப்பட்டதுள்ளது. இதனால் ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் ரூ.89.19 கோடி மதிப்புடைய சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அமலாக்கத் துறை வட்டாரங்கள், வெளிநாட்டு பண பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் ஜெகத்ரட்சகனின் சொத்துகளை முடக்கி, அன்னியச் செலாவணி நிர்வாகச் (பெமா) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.