கெஹலியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை! – சபையில் அறிவித்தார் சஜித்.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் மற்றும் சுகாதாரம் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட காரணங்களுக்காக அமைச்சர் கெஹலியவுக்கு எதிராக குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது என்று எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.