பிரேரணையை எதிர்கொள்ளத் தயார்! – ஓடி ஒளியமாட்டேன் என்று கெஹலிய சவால்.

“எனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வர உத்தேசித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள நான் தயாராகவுள்ளேன். ஒருபோதும் ஓடி ஒளியமாட்டேன்.”

இவ்வாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“சவாலுக்குப் பயந்து பொறுப்பிலிருந்து விலகித் தப்பியோடும் நபர் நான் அல்லன்.

காதாரத்துறை தொடர்பாக திட்டமிட்டுப் பொய்ப் பிரசாரங்களை சிலர் மேற்கொண்டு வருகின்றனர்.

நான் இதுவரை 8 அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளேன். சுகாதார அமைச்சராக நாட்டில் 22 இலட்சம் மக்களின் சுகாதாரம் தொடர்பான பொறுப்பை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.