நாடாளுமன்றில் இன்று 193 திருத்தங்களுடன் ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் ஏகமனதாக நிறைவேற்றம்.

ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு இல்லாமல் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது

குறித்த சட்டமூலம் 193 திருத்தங்களுடன் சபையில் நிறைவேற்றப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு அமைய கடந்த 6 ஆம் திகதி குறித்த சட்டமூலம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது

இந்த ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் தெற்காசியாவிலேயே சிறந்த சட்டமூலம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சட்டமூலம் அனைத்து வகையான ஊழலுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.