அதி வேகமாக வந்த கார் மோதி விபத்து…9 பேர் பரிதாப பலி.!

குஜராத்தில் பாலத்தின் மீது நடந்த விபத்தின் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது, கார் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அகமதாபாத் அருகே, சார்கெஜ் – காந்திநகர் நெடுஞ்சாலையில் உள்ள இஸ்கான் மேம்பாலத்தில் நள்ளிரவு ஒரு மணியளவில் டிரக் ஒன்று விபத்துக்குள்ளானது. இதனை அடுத்து, விபத்துக்குள்ளாக்கிய வாகன ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடியதை அடுத்து, டிரக்கை மீட்கும் பணியில் அப்பகுதியில் இருந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் பலர் அந்த விபத்தை சுற்றி நின்று வேடிக்கை பார்த்துள்ளனர்.

இந்நிலையில், 160 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த ஜாகுவார் கார் கூட்டத்தினரிடையே புகுந்ததில், அங்கு கூடியிருந்தவர்கள் தூக்கிவீசப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஒரு காவலர் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.